Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் வங்கிகள்….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதுமட்டுமன்றி நாளை முதல் பல கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

இந்நிலையில் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை வங்கி சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்டோர், கர்ப்பிணிகள், பார்வை மாற்றுத்திறன் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |