Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் மதுக்கூடங்கள் திறப்பு…. கண்டிஷன் போட்ட டாஸ்மாக் நிர்வாகம்….!!!!

தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் பல கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாளை முதல் பல்வேறு நடவடிக்கைகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை திறக்க அனுமதி அளித்துள்ளது.அதனைப்போலவே மதுக்கூடங்கள் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மதுக்கூடங்கள் திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மதுக்கூடங்கள் நுழைவாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகு வருடங்களுக்கு உள்ளே அனுமதிக்க வேண்டும்.மது கூடங்களில் ஒப்பந்ததாரர்கள் வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் கட்டாயம் சேகரித்து பதிவேட்டில் பராமரிக்க வேண்டும்.பணியாளர்கள் கூடுதல் கையுறைகள் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் 6 அடி சமூக இடைவெளி பின்பற்றும் வகையில் கோடுகள் அமைக்க வேண்டும்.

மது கூடங்களுக்கு உள்நுழையவும், வெளியேறவும் தனித் தனி வழியை பின்பற்ற வேண்டும். கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும். வாடிக்கையாளர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிவதோடு, கொரோனா அறிகுறி இல்லாத வாடிக்கையாளர்களை மட்டுமே மது கூடங்களுக்கு அனுமதிக்க வேண்டும். 55 வயதிற்கு கீழ் உள்ள பணியாளர்களை பணியமர்த்த கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |