Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு…. சற்றுமுன் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நவம்பர் 1 முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அக்டோபர் 25-ஆம் தேதிக்குள் பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக் கட்டிடத்தின் மேற்பரப்பில் குப்பைகள் இல்லாமலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு சீர்செய்யப்பட்டு பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |