Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் தீண்டாமை” இந்த மாவட்டம் தான் முதலிடம்…!!!!

மதுரையில் வசிக்கும் சமூக ஆர்வலரான கார்த்திக் என்பவர் தமிழகத்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படும் கிராமங்கள் உள்ளிட்டவை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு அவருக்கு பதில் மனு அனுப்பப்பட்டிருந்தது.
அதில், கடந்த வருடம் இறுதிவரை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு அறிக்கையின்படி, தமிழகத்தில் தீண்டாமை பாகுபாடு கடைப்பிடிக்கப்படும் கிராமங்களின் எண்ணிக்கை 445 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக, மதுரை மாவட்டத்தில் 43 இடங்களிலும், விழுப்புரம் மாவட்டத்தில் 25 இடங்களிலும், நெல்லை மாவட்டத்தில் 24 இடங்களிலும் தீண்டாமை வன்கொடுமைகள் அதிகம் நடப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை 1 இடங்களிலும் இந்த பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

Categories

Tech |