Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிசம்பர் 28 முதல்… இடியுடன் கூடிய கனமழை… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 28-ஆம் தேதி முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் உருவான இரண்டு புயல்கள் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 28-ஆம் தேதி தென் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |