தமிழக சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை தொடர்பான கொள்கை விளக்கக் குறிப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவையில் வாசித்தார். அதில் 2021 -2022 ஆம் நிதியாண்டில் டாஸ்மாக் கடைகள் மூலமாக ரூ.36,013.14 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் அரசுக்கு அதிகளவு வருவாய் கிடைத்துள்ளது என்று கூறினார்.
இதனையடுத்து கேள்வி நேரத்தின் போது தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது, நிர்வாக குறைபாடுகளால் தான் மின்வெட்டு நிலவி வருவதாகவும் போதுமான அளவிற்கு நிலக்கரி கையிருப்பு வைத்துக்கொள்வதற்கு தமிழக அரசு தவறிவிட்டது என்றும் அதிமுக உறுப்பினர் தங்கமணி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் எந்த இடத்திலும் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக தமிழகத்தில் குறைக்கப்படும் என்று சொல்லவில்லை.
போதுமான அளவு நிலக்கரியை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்குவதில்லை என்றும் கூறினார். இதன் மூலமாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படாது என்பது உறுதியாகியுள்ளது. அமைச்சர் கூறிய இந்த பதில் தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.