தமிழகத்தில் கிராமப்புறங்களில் படிக்கும் சிறுபான்மை மாணவியர் இடைநீற்றல் இல்லாமல் தொடர்ந்து கல்வியை கற்க மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஊக்கத்தொகையாக வருடத்திற்கு 500 ரூபாயும் ஆறாம் வகுப்பு மாணவியருக்கு ஆயிரம் ரூபாயும் வழங்குவதற்கு தமிழக அரசு 2.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக அரசு உதவி பெறும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் இந்த திட்டத்தில் சேர வேண்டும்.
மேலும்ஊக்க தொகை பெற சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்ணின் பெண் குழந்தைகளுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படும்.மாணவியரின் பெற்றோர் வருமான வரம்பு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.