Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா கைமீறி செல்லவில்லை – சுகாதாரத்துறை செயலாளர்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டை மீறி பொய்ப்பிட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் கொரோனா கைமீறி செல்லவில்லை என்றும் தமிழகத்தில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |