தமிழகத்தில் குடியரசு தினமான நாளை கிராமசபை கூட்டம் நடத்தக் கூடாது என ஊரக வளர்ச்சித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு முக்கியமான அரசு விழாக்களின் போதும் கிராம சபை கூட்டம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிராம சபை கூட்டம் நடக்க கூடாது என தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் குடியரசு தினமான நாளை கிராமசபை கூட்டம் நடத்தக் கூடாது என சென்னை தவிர்த்து அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கும் ஊரக வளர்ச்சித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக ஆண்டுதோறும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 26 ஆகிய தேதிகளில் கிராம சபை கூட்டம் நடத்தப்படும். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாளை கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.