தமிழகத்தில் கொரோனா காரணமாக நேற்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்தலால் பலி எண்ணிக்கை 11700 கடந்தது. கொரோனா தொற்றால் 7,80,505-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி நேற்று 1,459 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,80,505 -ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 9 பேர் உயிரிழந்தனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,703 ஆக உயர்ந்தது.
சென்னையில் ஒரே நாளில் 398 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். சென்னையில் இதுவரை 2,14,976 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று மட்டும் 1,471 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 7,57,750 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.