Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எஸ்.சி., எஸ்.டி. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

காஞ்சீபுரம் மாவட்டம் கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இருப்பதாவது “படித்த வேலைவாய்ப்பற்ற எஸ்.சி., எஸ்.டி. இளைஞர்கள் தகுதியான வேலை வாய்ப்பினை பெறும் நோக்கில் தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இப்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை காஞ்சீபுரம், மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து எஸ்.சி., எஸ்டி இளைஞர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (ஜூலை 16) காஞ்சீபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட இருக்கிறது. இந்த முகாமில் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்வதற்காக 50க்கும் அதிகமான தனியார் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளது.

8வது தேர்ச்சி, 10வது, 12-வது, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் என்ஜினீயரிங் படித்த வேலைநாடுநர்கள் இம்முகாமில் பங்கேற்று வேலைவாய்ப்பு பெற்று பயன் பெறலாம். இந்த முகாமில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கும் எஸ்.சி., எஸ்.டி. வேலைநாடுநர்களுக்கும் அனுமதி இலவசம் ஆகும். மேற்கண்ட கல்வி தகுதிகளையுடைய வேலைநாடுநர்கள் தங்களது அசல் கல்வி சான்றுகள் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் முகாமில் பங்கேற்று பயன்பெறுங்கள். இதில் பங்கேற்க விரும்பும் வேலைநாடுநர்கள் காலை 10 மணி முதல் முகாமிடத்தில் பதிவு செய்து கொள்ளலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |