தமிழகத்தில் கொரோனா இரண்டாம் நிலை பாதிப்பு காரணமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு கொரோனா கணிசமாக குறைந்து நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் அக்டோபர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும் என்று செப்டம்பர் மாத தொடக்கத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. ஆனால் தமிழக அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பதிவாகியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மெகா தடுப்பூசி முகாம் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் பண்டிகை காலங்கள் வருவதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடும். இதனால் கொரோணா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகளை அளிப்பது குறித்து தமிழக அரசு முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் மருத்துவத் துறை செயலர் மற்றும் துறை ரீதியான அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்வர். மேலும் இந்த ஆலோசனையில் பண்டிகை தினங்களில் கோவில்களை திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும்.