Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இ-பதிவுக்கு புதிய விதிமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தங்களின் அன்றாடத் தேவைகளுக்கு மட்டும் வெளியில் சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு மட்டுமே அனுமதி.

இந்நிலையில் திருமண விழா இ-பதிவுக்கு புதிய விதிமுறையை அரசு அமல்படுத்தியுள்ளது. அதன்படி திருமணத்தில் பங்கேற்கும் அனைத்து விருந்தினர்கள், வாகனங்களை ஒரே இ-பதிவில் குறிப்பிட வேண்டும். மணமகன், மணமகள், தாய், தந்தை என இவர்களில் ஒருவர் மட்டுமே இ-பதிவை மேற்கொள்ள முடியும். விண்ணப்பதாரர் பெயர் அழைப்பிதழில் இருக்க வேண்டும். அழைப்பிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |