Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் இருந்து வருவோருக்கு இனி இது கட்டாயம்…. கர்நாடக அரசு அதிரடி உத்தரவு….!!!!

கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாநில எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மேலும் இரு மாநிலங்களை ஒட்டியுள்ள 8 மாவட்டங்களில் இரவு நேர மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கர்நாடகா வருபவர்கள் அனைவரும் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்தச் சான்றிதழ் 72 மணி நேரத்திற்கு முன்பாக சோதிக்கப்பட்டது அவை இருக்க வேண்டும். இந்த நிபந்தனை கார், பேருந்து, ரயில் மற்றும் விமானம் மூலம் வரும் அனைவருக்கும் பொருந்தும். கொரோனா அறிகுறிகளுடன் கர்நாடகாவிற்கு வருபவர்கள் அனைவரும் 7 முதல் 15 நாட்கள் கட்டாயம் அரசு விடுதியில் தனிமை படுத்துவார்கள் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |