தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று முதல் 7 நாட்களுக்கு அனுமதி இல்லை. 8 ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் ஆற்றோரங்களில் திதி மற்றும் தற்பணம் தர அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோணா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி முக்கொம்பு சுற்றுலா தலம் மூடப்பட்டது.