தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய மருந்துகள் இருப்பு உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழகத்தில் ஓவியம் வரைய ரத்தத்தை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதை மீறினால் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளார். உடலில் இருந்து ரத்தத்தை எடுப்பதற்கு விதிமுறைகள் உள்ளன. ஆனால், ஓவியம் வரைய ரத்தம் எந்த முறையில் எடுக்கப்படுகிறது என்பது தெரியவில்லை. இதனால் உடல்நலத்திற்கு கேடு ஏற்படும் நிலை உள்ளதால், தடை விதிக்கப்பட்டுள்ளது.