தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் 25ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனிடையே நாளை மறுநாள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 25ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மழை பெய்யும் எனவும் சென்னையில் சில இடங்களில் மழை பெய்யும் எனவும், இன்றும் நாளையும் வடக்கு அந்தமான் கடல் பகுதியிலும், வங்க கடலின் மத்திய கிழக்கு, வட கேரளா, தென் கர்நாடகம் மற்றும் அரபிக்கடலில் மத்திய கிழக்கு தென் மேற்கில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.