தமிழகத்தில் இன்றும் நாளையும் 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும் நாளையும் 26 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்,
அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரிஉள்ளிட்ட 26 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் புதுச்சேரி மாவட்டத்திலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று முதல் 18ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 17ஆம் தேதி 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.