வருகின்ற செவ்வாய்க்கிழமை வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் இந்த மழை வரும் செவ்வாய்க்கிழமை வரை நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிலும் தென் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.