தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இந்த உள்ளாட்சி தேர்தலில் 57,746 பேர் போட்டியிட்டனர். சென்னையில் மண்டலத்திற்கு ஒரு வாக்கு எண்ணிக்கை மையம் என மொத்தம் 15 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.