தமிழகம் முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு குறித்த அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி ஆறாம் வகுப்பு முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் இன்று முதல் தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 6, 8, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், 7,9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையிலும் தேர்வு நடைபெறும்.
தேர்வுக்கு பிறகு டிச.24ம் தேதி முதல் ஜன. 1ம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுவதாகவும், ஜன. 2ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவதாகவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.