தமிழக அரசு சூப்பர் திட்டம் ஒன்றை அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளியிட்டுள்ளது.
சென்னை உள்ள கிண்டியில் கண் விழித்திரை அறுவை சிகிச்சை மீதான விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முறைகளை மேம்படுத்துதல் குறித்து சர்வதேச கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கு பெற்ற “ரெட்டிகான்” கருத்தரங்கு நடைபெற்றது. மேலும் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், அகர்வால் மருத்துவமனை குழும தலைவர் அமர் அகர்வால், செயல் இயக்குநர் அஸ்வின் அகர்வால் மற்றும் கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள், அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து இந்த நிகழ்வுக்கு பின் சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் பேசியுள்ளதாவது, சமுதாயத்தில் கண் அறுவை சிகிச்சைகள் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும். இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டைக் கண்டறியும் நோக்கில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, கண் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் மேலும் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதியவர்கள் ஆகியோர்க்கு அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று, இலவசமாக கண் மருத்துவ முகாம்கள் நடத்துவது பற்றி முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் பிறகு, அகர்வால் கண் மருத்துவமனை குழும தலைவர் அமர் அகர்வால் பேசியுள்ளதாவது, கொரோனா தொற்றுக்கு பின் கண்களில் குறைபாடு உடையவர்களின் எண்ணிக்கை 100 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சத்தான காய்கறிகள், உடற்பயிற்சி, உரிய பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலம் கண்களில் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க முடியும். இதையடுத்து முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கண் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். மேலும் கண் தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.