Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்…. முதுகலை படிப்பில் சேர இன்று (செப்..7) முதல் விண்ணப்பம்…..!!!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு நிறைவடைந்த நிலையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வழக்கத்தை விட இந்த வருடம் கூடுதலாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை கட்டப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு குறித்து அறிவிப்பை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் அதாவது செப்டம்பர் 7ஆம் தேதி முதல் முதுகலை பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்ப பதிவு தொடங்குகிறது. இதற்கு கடைசி நாள் செப்டம்பர் 16ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை செயல்பாடுகள் வருகின்ற 21ஆம் தேதி தொடங்கும். விண்ணப்ப பதிவு உட்பட மேலும் விவரங்களுக்கு மாணவர்கள் www.tngasapg.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |