Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு…. மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 7-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யும். இதனையடுத்து கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜூலை 8-ம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் கன மழை பெய்யும்.

இதனையடுத்து 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தென் தமிழக கடலோர பகுதிகள், குமரி கடல், மன்னார் வளைகடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல்களில் சூறாவளி காற்று வீசும். இதனை எடுத்து ஜூலை 7 மற்றும் 8-ம் தேதிகளில் மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசும். அதன் பிறகு 7 முதல் 11-ம் தேதி வரை மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதி, கேரளா-கர்நாடகா எல்லை பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வளர்த்த சூறாவளி காற்று வீசும். இதன் காரணமாக மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |