வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்த செய்திகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை உட்பட அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும்,வருகின்ற 9-ம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் வடக்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
