தமிழகத்தில் கடந்த 2 மாதத்திற்கு மேலாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் நிலையில்,மக்களுக்கு சற்று குளிர்ச்சி ஊட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் கிருஷ்ணகிரி, வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ஜூன் 3, 4 ஆகிய தேதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதால் குமரி கடல் மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.