தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.