Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை….. 6 மாவட்டங்களுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை…..!!!!!

தென் கிழக்கு வங்க கடலில் நேற்று புதிதாககாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் பின்னர் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து டிசம்பர் எட்டாம் தேதி காலை வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அருகில் கரையை வந்தடையும். இதனால் டிசம்பர் எட்டாம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்யக்கூடும் எனவும் ஓரிரு இடங்களில் பலத்த சூறாவளி காற்றுடன் மலைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருவாக வாய்ப்பு உள்ளதால், அரக்கோணம் முகாமில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விரைகின்றனர்.

Categories

Tech |