Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் வளர்ச்சிகளுக்கு பாடுபடுவோம்…. கிராமசபை கூட்டத்தில் முதல்வர் பேச்சு…!!!

முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழக கிராமசபை கூட்டத்தில் முன் வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் கொரோனா தொற்று தடுப்பு விதிகளை பின்பற்றி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து  உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் கிராமங்களைத் தவிர மற்ற அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டமானது நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தில் 420 ஊராட்சிகள் உள்ளது. அதில் தேர்தல் நடைபெறும் கிராமங்களை தவிர்த்து 376 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டமானது இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கிராம மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

கிராமசபை கூட்டத்தில் பேசிய முதல்வர் முன் வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஒவ்வொரு வாரமும் கேட்டு தெரிந்துகொள்வேன். மேலும் கரையாம் பட்டியில் கதிரடிக்கும் களம் ரூ 6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் மற்றும் பாப்பாப்பட்டியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் நீர்தேக்க தொட்டி அமைத்து தரப்படுதரப்படும். எந்த வேற்றுமையும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சிகளுக்கு பாடுபடுவோம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |