பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், இன்னும் எத்தனை நாள் இந்த பித்தலாட்டம் ? கவலையே படாதீங்க.. அவங்களுக்கு இன்னும் நான்கு வருடம் இருக்கின்றது. ஆனால் நான்கு வருடம் நீடிக்குமா என்று தெரியாது.முழு நாலு வருசம் ஆட்சியில் இருந்தாலும், அதுக்கு பிறகு திமுக நிச்சயமாக தமிழ்நாட்டில் ஆட்சி செய்வது கிடையவே கிடையாது, உறுதியாக சொல்கிறேன்.
கிடையவே கிடையாது. எல்லாமே ஒட்டுமொத்தமாக பாரதிய ஜனதா கட்சி தான் தமிழகத்தில் ஆளக் கூடிய கட்சியாக நிச்சயமாக வரும். உறுதியாக ஏன் சொல்கிறேன் என்றால் ? அண்ணா திமுக கூட்டணியில் இருக்கு. இருக்கு இல்ல அது இரண்டாவது விஷயம். சட்டமன்றத்தில் தைரியமாக, ஆண்மையோடு, முதுகெலும்போடு பேசக்கூடிய அண்ணா திமுகவை நான் பார்க்க முடியவில்லை.
கிடையவே கிடையாது நீங்களும் பேசலாம்ல் என கேட்கலாம். நான்கு பேரை வைத்து அங்கு ஒன்றுமே பேச முடியாது.பேசுனா வெளியே புடிச்சுபோட்டுருவாங்க. நாலு பேரில் 2பேர் பெண்கள். அண்ணன் எம்.ஆர் காந்தியை பார்த்தீர்களா பாவம் அவருக்கு 70 வயசு ஆச்சு. வேற ஒன்னும் செய்ய முடியாது. பேசினால் மைக்கை கட் பண்ணி விடுவார்கள்.
அண்ணா திமுக எதிர்க்கட்சி அல்ல. சட்டமன்றத்தில் பேசாமல் இருந்தாலும் இன்று பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கட்சியாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கின்ற மிகப்பெரிய தலைவராக அண்ணாமலை இருக்கின்றார். அதில் யாருக்கும் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. ஊடகங்களில் பேட்டி கொடுக்கும்போது தைரியமாக எல்லாம் பேச வேண்டும் என தெரிவித்தார்.