தமிழகத்தின் 4 மாவட்டங்களில் 16-ஆம் தேதி முதல் மழைக்கான வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 16, 17, 18 ஆகிய தினங்களில் தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான, பரவலான மற்றும் மிதமான மழை பெய்ய கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதேபோன்று காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் இன்றும் நாளையும் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.