தமிழகத்தில் மேலும் 261 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 261 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 705 பேர் குணமடைந்துள்ளனர். 3,505 பேர் கொரோனாவால் சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் கொரோனா பெருந்தோற்றால் உயிரிழந்துள்ளார்.
இதனால் ஒட்டு மொத்த உயிரிழப்பானது 38,011 ஆக உயர்ந்துள்ளது. இதில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக சென்னையில் 76 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 100-க்கும் கீழாகவே பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.