சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஜெகன் என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஜெகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.