பெண்களை தரக்குறைவாக பேசிய புகாரில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச் பாரிமுனையை சேர்ந்த திரு. அஸ்வத்தாமன் என்பவர் சென்னை காவல் ஆணையருக்கு ஆன்லைனில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரை திருமாவளவன் இந்து பெண்களை தரக்குறைவாக விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டதாக புகார் தெரிவித்திருந்தார். அவருடைய கருத்து பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் கலவரத்தை தூண்டிய சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக திரு. அசுவத்தாமன் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் திருமாவளவன் மீது அவதூறு கருத்துக்களை வெளியிட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் ட்விட்டரில் பதிலளித்துள்ள திருமாவளவன் மகளிரை மனு நூலை கொச்சைப்படுத்துவதாகவும் அதனை சுட்டிக்காட்டிய தற்காகவே தன் மீது பழி சுமத்தி அவதூறு பரப்பபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.