Categories
உலக செய்திகள்

தன் நாட்டிற்கு திரும்பும் போது… மன்னர் மற்றும் மகாராணிக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஒட்டுமொத்தமாக குவிந்ததால் ஏற்பட்ட விளைவு..!!

நேபாளத்தின் முன்னாள் மன்னரும் ராணியும் இந்திய மத விழாவில் கலந்து கொண்டு நாடு திரும்பிய போது அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

நேபாளத்தின் முன்னாள் மன்னர் ஞானேந்திர பிர் பிக்ரம் ஷா மற்றும் அவருடைய ராணி ராஜ்ய லக்ஷ்மி தேவி ஆகிய இருவரும் இந்தியாவில் கடந்த ஒரு வார காலமாக தங்கியிருந்தனர். இந்நிலையில் அங்கு நடைபெற்ற கும்பமேளா விழாவில் கலந்து கொண்டு அதன் பின் ஞாயிற்றுக்கிழமை அன்று இருவரும் காத்மாண்டு திரும்பினர். இதையடுத்து இந்திய மத விழாவில் கலந்து கொண்டு நாடு திரும்பிய அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக முன்னாள் மன்னரின் செய்தித் தொடர்பாளர் பானி ராஜ் கூறியுள்ளார்.

இதனையடுத்து அவர்கள் இருவரும் தற்போது கொரோனா தொற்றின் காரணமாக நிர்மல் நிவாஸில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ராஜ பகத் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவி வரும் நிலையிலும் கும்பமேளா விழாவில் கலந்துகொண்டு அங்குள்ள கங்கையில் நீராடுவதற்காக 2.5 கோடி மக்கள் அங்கு குவிந்ததாக கூறப்படுகிறது. இதன் விளைவாக அந்த விழாவில் கலந்து கொண்டவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |