நடிகர் தனுஷ் மீது பின்னணி பாடகி சுசித்ரா போலீசில் புகார் அளித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாடகி சுசித்ரா மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசிக்கொள்ளும் ஆடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.அந்த ஆடியோவில் பாடகி சுசித்ரா தன்னைப் பற்றி ஏன் தவறாக கூறினீர்கள் என்று பயில்வான் ரங்கநாதன் இடம் சண்டையிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷ் மீது நடிகை சுசித்ரா போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் என்னைப்பற்றி பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோ வெளியிட்டதன் பின்னணியில் நடிகர் தனுஷ், இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் உள்ளிட்டோர் இருக்கலாம் என்று சந்தேகம் எழுகின்றது. தனுஷுக்கு வேண்டிய நபர்கள் ஏற்கனவே என் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். நான் தனியாக வசித்து வருவதால் அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.