தனுஷ்கோடியில் திடீரென ஏற்பட்ட கடைசி சீற்றத்தால் தடுப்பு சுவரின் கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் சிதறி கிடக்கிறது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றம் காணப்பட்டு வருகின்றது. கடல் சீற்றத்தால் தடுப்பு சுவரின் கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் சிதறி கிடப்பதுடன் கடல் நீரானது சாலையின் தடுப்பு சுவரையும் தாண்டி சாலை வரை வந்து செல்கிறது. அரிசல் முனை சாலை அருகே சாலை முழுவதும் தடுப்பு சுவரின் கற்கள் பெயர்ந்து சிதறி உள்ளதால் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் டயர்களும் பஞ்சராகி வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
அதே நேரம் கடல் அலையின் வேகத்தை சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். மறுபக்கம் கடல் சீற்றம் அதிக அளவில் உள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன.