Categories
சினிமா தமிழ் சினிமா

தனி இசை ஆல்பம் வெளியிடுபவர்கள் தான் பெரிய பணக்காரர்கள்… பிரபல நடிகர் பேச்சு…!!!!!

பிரபல இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஓ பெண்ணே என்ற தனி இசை பாடலை தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கி அவரே அதில் பாடி நடித்தும் உள்ளார். இதன் தமிழ் பாடலை நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசும்போது எம் எஸ் விஸ்வநாதன் சந்திக்கும் போது பதற்றம் இருக்காது அதற்கு மாறாக சந்தோஷமாக இருக்கும். ஆனால் இளையராஜாவை சந்திக்கும் போது சத்தமாக பேசலாமா வேண்டாமா என்று கொஞ்சம் பயமாக இருக்கும் பேசாமல் இருந்தாலும் அவர் கொடுக்கும் இசையை சந்தோஷமாக வாங்கிக் கொண்டு வரலாம்.

நான் இளையராஜாவுக்கு மிகப்பெரிய ரசிகன் தேவி ஸ்ரீ பிரசாந்த் அவதாரம் படத்திற்கு கொடுத்த பின்னணி இசை பிரசாதமாக இருந்தது. இந்த நிலையில் தற்போது தனி இசை பாடலை உருவாக்கி உள்ள அவரது முயற்சி சிறப்பானது ஆரம்ப காலகட்டத்தில் தனிப்பாடல்கள் சினிமாவை விட பிரபலமாக இருக்கிறது. அதன்பின் சினிமா அத்தனையும் விழுங்கிவிட்டது இந்த நிலையில் படத்திற்கு என்ன இசை உண்டோ அதை தான் கிட்டத்தட்ட நூறு வருடங்களாக போட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இசை கலைஞர்களை தனியாக விட்டால் அழகான பாடல்கள் உருவாகும். அமெரிக்காவில் சினிமா நட்சத்திரங்களை விட தனி இசை ஆல்பம் வெளியிடுபவர்கள் தான் மிகப்பெரிய பணக்காரர்கள் தனியாக ஜெட் விமானம் வைத்து பறந்து கொண்டிருக்கின்றார்கள். ஸ்ருதிஹாசன் அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்கும்போது உலகில் அதிக படங்கள் எடுக்கும் நாடு இந்தியா என்ற காரணத்தினால் இங்கு சினிமா கற்றுக் கொள்ளலாம் இசையையும் கற்றுக் கொண்டு வரவேண்டும் என கூறினேன். ஏனென்றால் சினிமாவை விட பெரியதாக வளரக்கூடிய வாய்ப்பு வருங்காலத்தில் இசைக்கு இருக்கிறது என்று நான் நம்புகிறேன் என்று சொல்லி இசையை கற்க அனுப்பினேன் இசை இன்னொரு தொழிலாக உருவாக வேண்டும் இது இசைக்கும் நல்லது இசை கலைஞர்களுக்கும் நல்லது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |