தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடந்து முடிந்தது. இதையடுத்து இன்று குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி இலவச மாணவர் சேர்க்கைக்கு ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாநிலம் முழுவதும் எட்டாயிரத்திற்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் ஒரு லட்சம் இடங்களுக்கு இன்று குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Categories
தனியார் பள்ளிகளில் இலவச கட்டணம்…. குலுக்கல் முறையில் 1 லட்சம் பேர் தேர்வு…!!!!
