Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தனியார் தார் கலவை மையம் திறக்க… பொதுமக்கள் கடும் எதிர்ப்பு… போலீசார் குவிப்பு..!!

பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் தேவாலாவில் தனியார் கலவை மையம் திறக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி  மாவட்டத்தில் உள்ள கூடலூர் தாலுகாவில் தேவாலய பகுதியில் தனியார் தார் கலவை மையம் உள்ளது. இந்த கலவை மையம் குடியிருப்பு பகுதியை சுற்றி காணப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவுகின்றன என்று போக்கர் காலனி மக்கள் இதை  செயல்படுத்தக்கூடாது என்று எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்கள்.

இதனால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஆய்வு செய்து கடந்த வருடம் இந்த கலவை மையத்தை இயங்க தடை விதித்துள்ளனர். இதையடுத்து தார் கலவை  மைய நிர்வாகம்  முறையிட்டு மீண்டும் இயக்க மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி அனுமதி வழங்கினார். போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ராமலிங்கம், குமார் இன்ஸ்பெக்டர்கள் திருஞானசம்மந்தம், அருள் அமுதா உட்பட ஏராளமான காவல்துறையினர் இந்த தார் கலவை மையம் முன்பாக நிறுத்தப்பட்டனர். பின் இந்த மையம் திறக்கப்பட்டு  அதிலிருந்து சாலை பணிநடைபெறும் இடங்களுக்கு லாரி மூலம் கலவைகளை கொண்டு சென்றனர்.

இந்த மையம் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்கள்  எதிர்ப்பை  தெரிவித்தனர். அதுமட்டுமல்லாது அங்கு வந்து  போராட்டம் நடத்த போவதாக தகவல் வந்தது. இதையடுத்து கூடலூர் தாசில்தார் சித்தராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், மாசு கட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர் லிவிங்ஸ்டன் ஆகியோர் இந்த கலவை மையத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் பேசியது, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுத்து இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்கள். இந்த தார்  கலவை மையம்  தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் செயல்பட்டது.

Categories

Tech |