குற்றால மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்திலும், மேற்கு தொடர்ச்சி மலையிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் அணைக்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டம் குற்றால மெயின் அருவில் இன்று காலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவில் பாதுகாப்பு வளையத்தின் மீது தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மெயின் அருவில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதே போல ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி போன்ற அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.