Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்….. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை ஏ.வி பட்டி சாலையில் இருக்கும் ரயில்வே கேட் அருகே வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் வடமதுரை ஆதம்ஸ் நகரை சேர்ந்த முனீஸ்வரன்(26) என்பதும், அவர் வத்தலகுண்டுவில் தமிழக நீர்வள துறையில் வேலை பார்ப்பதும் தெரியவந்தது. இவர் தனது தாய் முத்துலட்சுமி, தம்பியுடன் வடமதுரையில் வசித்து வந்துள்ளார். நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற முனீஸ்வரன் ரயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்துள்ளது.

Categories

Tech |