Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

ரயில் அடிபட்டு ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்பாத்துறை அருகே இருக்கும் ரயில் தண்டவாளத்தில் ஆணின் சடலம் கடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த ஆணின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் புதுப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான கருப்பசாமி என்பது தெரியவந்தது. இவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி இறந்துவிட்டார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |