கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இன்று முதல்
சென்னை கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. மேலும்
நடைபயிற்சி செய்வோருக்கு மட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் காரணமாக மறு உத்தரவு வரும்வரை பொதுமக்களுக்கு மணல் பரப்பில் அனுமதி இல்லை என அறிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னையில் தடையை மீறி கடற்கரைகளில் குவிந்தவர்களை காவல்துறையினர் வெளியேற்றினர். தொற்று பரவல் காரணமாக மறு உத்தரவு வரும் வரை, கடற்கரை மணல் பரப்பில் செல்ல மகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மெரினா, பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம் கடற்கரையில் குவிந்த மக்களை போலீசார் வெளியேற்றினர்.