தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மக்கள் தேவையில்லாமல் வெளியில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி வருகிறார்கள். இன்று நடிகர் ஜீவா கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டார். தடுப்பூசி எடுக்க பலரும் தயக்கம் காட்டி வரும் நிலையில், மக்களுக்கு நம்பிக்கை மட்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜீவா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். மேலும் தடுப்பூசி குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம். அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும். தடுப்பூசி மட்டுமே தீர்வு என்று தெரிவித்துள்ளார்.