தமிழகத்தில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் சில மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள்.
அதன்படி தமிழகத்தில் ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதனை போட்டுக் கொள்வதற்கு மக்கள் முன்வர மிகவும் தயங்குகிறார்கள். அதனால் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை 10 மணி அளவில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொள்கிறார். ஏற்கனவே சுகாதாரத்துறை செயலாளர் தடுப்பூசி எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.