சில தினங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகை நக்மாவிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது.
அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன. ஆனால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மிகவும் அச்சப்படுகிறார்கள். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சரவணா தடுப்பூசி போட்டுக் கொண்டேன், எனினும் நேற்று எடுத்த கொரோனா பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே வீட்டில் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்று நடிகை நக்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.எனவே தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.