Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு இந்தியா எதிர்ப்பு…. ஜி 7 மாநாட்டில் விளக்கம்….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள ஏதுவாக தடுப்பூசி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து ஜி7 மாநாட்டில் விவாதித்த போது,வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில் வளரும் நாடுகளில் குறைவான சதவீதத்தினருக்கு தான் தடுப்பூசி கிடைத்துள்ளது. இந்நிலையில் தடுப்பூசி பாஸ்போர்ட்டு வழங்குவது என்பது மிகவும் பாரபட்சமான ஒன்று என்று இந்தியா தெரிவித்துள்ளது.

Categories

Tech |