Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தடுப்பு சுவர் மீது மோதிய வாகனம்…. முன்னாள் ராணுவ வீரர் உள்பட இருவர் பலி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் முன்னாள் ராணுவ வீரர் உடள்பட இரண்டு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதிய அக்ராவரம் பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான ஆனந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான கார்த்திக் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் அக்கராகாரம் ரயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பேரின் சடலங்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |