சென்னை மதுரவாயல் பகுதியில் வசித்து வரும் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக பூந்தமல்லியை சேர்ந்த கல்லூரி மாணவரான ஜார்ஜ் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறி உள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். இந்த நிலையில் மாணவி வீட்டில் தனியாக இருந்த போது வீட்டிற்கு வந்த ஜார்ஜ் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் அதை வெளியே சொல்லிடுவேன் என்று மிரட்டி பலமுறை அந்த மாணவியை வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் மாணவியின் தயாருக்கு தெரிய வந்த நிலையில் கல்லூரி மாணவர் ஜார்ஜ் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் ஜார்ஜை கைது செய்துள்ளனர்.